சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் வட்டம் கோமுகி நதி அணையிலிருந்து பழைய பாசனப் பரப்பு மற்றும் புதிய பாசனப் பரப்பு பாசன வசதி பெறும் வகையில் 07.10.2023 முதல் 22 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10860 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும் என்று தெரிவித்துள்ளனர்.