பாலியல் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்து, உச்சபச்ச தண்டனை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 முக்கிய கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன. மருத்துவத்துறையில் நிலவும் ஊழல்கள், மோசடிகள் குறித்தும் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் இரவுப்பணியின் போது, முதுகலை 2ம் ஆண்டு படித்த பயிற்சி பெண் டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட விவகாரத்தில் அம்மாநில ஜூனியர் டாக்டர்கள் கடந்த ஒரு மாதமாக போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்., ஜூனியர் டாக்டர்கள் பணிக்கு திரும்ப வேண்டும், இல்லாவிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதை தடுக்க முடியாது என உச்ச நீதிமன்றம் கெடு விதித்தும் போராட்டம் நடைபெற்று வருகிறது.