கொல்கத்தாவில் மர்ம பொருள் வெடித்ததில் ஒருவர் காயம்

கொல்கத்தா: கொல்கத்தாவில் மர்ம பொருள் வெடித்ததில் ஒருவர் காயமடைந்தார். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் எஸ்.என். பானர்ஜி சாலை – பிளாச்மேன் சாலை சந்திப்பு அருகே பழைய பிளாஸ்டிக், இரும்பு உள்ளிட்ட பொருள்கள் சேகரிக்கும் கடை உள்ளது. நேற்று மதியம் பாபி தாஸ்(58) என்பவர் இந்த சாலையை கடக்க முயன்றார். அப்போது அங்கிருந்த மர்ம பொருள் வெடித்ததில் பாபி தாஸ் காயமடைந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

திருவள்ளுவர் பிறந்தநாள் குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்!!

MSME தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்

ஜம்மு-காஷ்மீர் முதல்கட்ட தேர்தலில் மாலை 5 மணி வரை 58.19 சதவீத வாக்குகள் பதிவாகின