கடந்த 42 நாட்களாக வேலைகளை புறக்கணித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மருத்துவர்கள் நேற்று போராட்டத்தை கைவிட்டு அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் பணிகளுக்கு திரும்பினார்கள். பகுதியளவு மருத்துவர்கள் மட்டுமே பணிக்கு திரும்பியுள்ளனர். அவசர சிகிச்சை பிரிவு மற்றும் அத்தியாவசிய மருத்துவசேவைகள் மட்டுமே வழங்கப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
புறநோயாளிகள் பிரிவு செயல்படாது என்றும் மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். மருத்துவர்கள் பகுதியளவு பணியை மட்டுமே தொடங்கியுள்ளதாகவும், தங்களது கோரிக்கையை அரசு நிறைவேற்றுவதற்கு இன்னும் 7 நாட்கள் காத்திருப்பதாகவும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில் மீண்டும் வேலை நிறுத்தப்போராட்டம் தொடங்கப்படும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.