சென்னை: சென்னை கொளத்தூர் பாலாஜி நகரில் மழைக்கால வெள்ளத் தடுப்புப் பணிகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு ஆய்வு நடத்தி வருகிறார். பாலாஜி நகர் பகுதியில் நடந்துசென்று ஒவ்வொரு பகுதியாக ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். சென்னை முழுவதும் இரவு பகல் பாராமல் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் இருக்கின்றனர்.