சென்னை: கொடுங்கையூரைச் சேர்ந்தவர் தினேஷ் (29) என்பவர், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். ஆவடி அடுத்த அயப்பாக்கத்தில் உள்ள தனியார் கழிவுநீர் அகற்றும் நிறுவனத்தில் மிஷின் ஆப்ரேட்டராக பணியாற்றி வந்த இவர், நேற்று மாலை அலுவலகத்தில், கீழே கிடந்த வயரை எடுத்த போது, மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.