சென்னை: கொடிசியாவில் ஜூன் 15ம் தேதி திமுக சார்பில் முப்பெரும் விழா நடைபெற உள்ளது என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். ‘மேற்குமண்டலம் முழுவதும் திமுகவின் வசமாகி உள்ளது. திமுகவின் முப்பெரும் வெற்றி விழாவை கோவையில் நடத்த வேண்டும் என்று முதலமைச்சர் விருப்பம். திமுகவினரின் கடுமையான உழைப்புக்கு மக்களவை தேர்தலில் மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது’ எனவும் அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.