ரூ.1.10 கோடி நஷ்ட ஈடு கோரி பழனிசாமி தொடுத்த வழக்கு சாட்சிய பதிவுக்காக மாஸ்டர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் மேத்யூ சாமுவேலுக்கு எதிரான வழக்கில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதிய மனுவை தாக்கல் செய்தார். மேத்யூ சாமுவேலுக்கு எதிரான வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்தார். அதில்; எதிர்க்கட்சி தலைவராக இருப்பதால் பாதுகாப்பு, மற்ற வழக்காடிகளுக்கு சிரமம் ஏற்படுவதால் ஆஜராக இயலாது.
நீதிமன்றத்தில் ஆஜராவதை வேண்டுமென்றே தவிர்க்கவில்லை; சட்டநடைமுறைகளை பின்பற்ற தயார். தனது வீட்டில் இருந்து சாட்சியம் அளிக்கும் வகையில் வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டும் என்று கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். எடப்பாடி மனு குறித்து மேத்யூ சாமுவேல் உள்ளிட்டோர் பதில்தர உத்தரவிட்டு விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.