கோடநாடு கணினி ஆபரேட்டரின் தந்தையிடம் விசாரணை..!!

கோத்தகிரி: கோடநாடு வழக்கில் தற்கொலை செய்த கணினி ஆபரேட்டர் தினேஷின் செல்போன் பற்றி அவரது தந்தையிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. சிபிசிஐடி போலீசார் கோத்தகிரி அருகே உள்ள தினேஷ் வீட்டுக்கு சென்று அவரது தந்தையிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தினேஷ் பயன்படுத்திய செல்போன் குறித்து அவரது தந்தை போஜனிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். தினேஷ் இறந்து 7 ஆண்டுகள் ஆவதால் அவரது செல்போன் குறித்து எதுவும் தெரியாது என அவரது தந்தை பதில் அளித்ததாக தகவல் தெரியவந்துள்ளது.

Related posts

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரையில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவிப்பு

சிவகாசி – சாத்தூர் சாலையில் உள்ள லாரி ஷெட்டில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து விபத்து

கூட்டுறவு செயலி!