கோடநாடு வழக்கு: இருவர் விசாரணைக்கு ஆஜர்

கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இருவர் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர். கோவை காவலர் பயிற்சி மைதானத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் இருவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஜித்தின் ஜாய், ஜம்ஷேர் அலி ஆகியோர் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர். வழக்கு தொடர்பாக ஏற்கெனவே 8 பேரிடம் விசாரணை நடந்த நிலையில் மேலும் இருவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Related posts

கர்நாடகாவில் பாஜக எம்.எல்.ஏ. முனிரத்னா மீது பாலியல் வழக்குப்பதிவு

அத்வானி மதுரை வருகையின் போது வெடிகுண்டு வைக்க திட்டமிட்டதாக கைதான ஷாகிர் சிறையில் தற்கொலை முயற்சி

கும்பகோணத்தில் ஓடும் பேருந்தில் நடத்துநர் மீது தாக்குதல் நடத்திய 3 இளைஞர்கள் கைது: சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் நடவடிக்கை