தற்போது, சிபிசிஐடி போலீசார் மீண்டும் விசாரணையை துவக்கியுள்ளனர். பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் ெகாடநாடு எஸ்டேட்டில் காவலாளி கொலை நடந்த இடம், ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோர் தங்கும் அறைகள் ஆகிய இடங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அங்கிருந்து பல்வேறு தடயங்களையும் சேகரித்துள்ளனர். மேலும், பல்வேறு புகைப்படங்களையும் எடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து 9 வகையான பொருள்களை ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் இவ்வழக்கின் முக்கிய தடயங்களாக கூடுதல் எஸ்பி முருகவேல் தலைமையிலான அதிகாரிகள், நீதிபதியிடம் ஒப்படைத்தனர்.