ஜெயலலிதா பற்றி பேச பன்னீருக்கு தகுதி இல்லை; கோடநாடு பங்களாவை அபகரிக்கவே டிடிவி தினகரன் போராட்டம் நடத்துகிறார்: ஜெயக்குமார் காட்டம்

சென்னை: கோடநாடு பங்களாவை அபகரிக்கவே டி.டி.வி.தினகரன் போராட்டம் நடத்துகிறார் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஜெயலலிதா பற்றி பேச ஓ.பன்னீர்செல்வத்துக்கு தகுதி இல்லை என்று காட்டமாக கூறினார். ஜெயலலிதாவுக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஜெயலலிதாகவுக்கு எதிராக ஜானகி அணி சார்பில் வேட்பாளரின் முகவராக செயல்பட்டவர் ஓ.பன்னீர்செல்வம். கோடநாடு பங்களா யாருக்கு சொந்தம் என்பது ஓ.பி.எஸ்.க்கு நன்றாக தெரியும் என்று குறிப்பிட்டார்.

Related posts

ஒன்றிய அரசின் குற்றவியல் சட்டத்தை எதிர்த்து; திமுக சார்பில் நாளை உண்ணாவிரத போராட்டம்: சட்டத்துறை செயலர் என்.ஆர். இளங்கோ அறிவிப்பு

சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை

கட்டுமான தொழில் கடுமையாக பாதிப்பு; ஆந்திராவில் இருந்து மணல் எடுத்து வர அனுமதி: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு லாரி உரிமையாளர்கள் சங்கம் கடிதம்