இந்நிலையில் அறநிலையத்துறையின் அனுமதி பெற்று சென்னை மாநகராட்சி மூலம் ரூ.1.65 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கும் பணியை சைதை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியன் 2020ம் ஆண்டு துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து கோயில் குளத்தை சீரமைக்கும் பணி நடந்து முடிந்தது. இதையடுத்து நேற்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி, மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், எம்எல்ஏக்கள் தாயகம் கவி, அரவிந்த் ரமேஷ், பிரபாகர ராஜா மற்றும் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, மத்திய வட்டாரம் துணை ஆணையாளர் எஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான், நிலைக்குழு தலைவர்கள், தனசேகரன், பாலவாக்கம் த.விசுவநாதன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.