கோடம்பாக்கத்தில் யூடியூப் நிறுவன ஊழியர் தற்கொலை: போலீசார் விசாரணை

சென்னை: கோடம்பாக்கத்தில் யூடியூப் நிறுவன ஊழியர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை ெசய்து கொண்டார். சென்னை கோடம்பாக்கம் காமராஜ் காலனியை சேர்நத்வர் தினேஷ்(27). இவர் தனியார் யூடியூப் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். வழக்கம் போல் நேற்று மாலை பணி முடிந்து வீட்டிற்கு வந்த தினேஷ் உள்பக்கமாக வீட்டின் கதவை பூட்டிக்கொண்டார்.

நீண்ட நேரமாக கதவு திறக்கப்பட்டாததால் சந்தேகமடைந்த அருகில் வசிக்கும் அவரது நண்பர் மணிகண்டன் என்பவர் பல முறை போன் செய்தும், தினேஷ் எடுக்காததால் அருகில் உள்ளவர்கள் உதவியுடன் கதவை உடைத்து பார்த்த போது, சமையல் அறையில் தூக்கிட்டு தினேஷ் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து நண்பர் மணிகண்டன் கொடுத்த புகாரின் படி கோடம்பாக்கம் போலீசார் தினேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காதல் விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு காரணமா என்ற கோணத்தில் போலீசார் தினேஷ் செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கேரளாவில் நிபா வைரஸ் பரவல்: குமரி எல்லையில் மருத்துவ குழு தீவிர சோதனை

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?