சுற்றுலாப்பயணிகள் செல்பி, ரீல்ஸ் எடுத்து மகிழும் விதமாக முதல் முறையாக ‘360 டிகிரி டனல்’ என்ற புதிய செல்பி கருவியும் கண்காட்சி அரங்கில் நிறுவப்பட்டுள்ளது. வழக்கமாக மலர் கண்காட்சி 2 நாட்கள் மட்டுமே நடத்தப்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டு முதன்முறையாக 10 நாட்கள் நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு மலர் கண்காட்சியில் நுழைவு கட்டணம் ரூ.30 ஆக இருந்தது. தற்போது இந்த கட்டணம் ரூ.75 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது பெரியவர்களுக்கு ரூ.75, சிறுவர்களுக்கு ரூ.50 வீதம் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நுழைவு கட்டணத்தை குறைக்க வேண்டும் என சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் இருந்து காரில் கொடைக்கானலுக்கு காரில் சுற்றுலா வந்தவர்கள் மீண்டும் நேற்று ஊருக்கு புறப்பட்டனர். கொடைக்கானல் – வத்தலக்குண்டு மலைச்சாலையில் பண்ணைக்காடு பிரிவு அருகே மூலையாறு பகுதியில் வந்தபோது, கொடைக்கானல் நோக்கி வந்து கொண்டு இருந்த சரக்கு லாரி திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து காரின் மீது விழுந்து விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக காரில் வந்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த தம்பதி, குழந்தை எவ்வித காயமின்றி உயிர் தப்பினர்.