திண்டுக்கல்: கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் சட்டவிரோத குவாரியின் நடவடிக்கையை உடனடியாக நிறுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத குவாரி நடத்தியவர்கள் மீது கொடைக்கானல் கோட்டாட்சியர் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியைச் சேர்ந்த எட்வின் ஜோசப் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.