கொடைக்கானலில் இ-பாஸ் முறை தொடரும்

கொடைக்கானல்: கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கும், சுற்றுலாப்பயணிகளின் வருகையை கணக்கெடுப்பதற்காகவும் கடந்த மே 7 முதல் ஜூலை 30 வரை இ-பாஸ் முறை அமலானது. ஜூலை 30க்கு பிறகு உயர்நீதிமன்ற உத்தரவின்படி இ-பாஸ் முறை செப். 30 வரை நீட்டிக்கப்பட்டு இருந்தது. இ-பாஸ் அமலில் இருந்த 116 நாட்களில், கொடைக்கானல் நகருக்குள் வருவதற்கு 2,91,561 வாகனங்கள் பதிவு செய்து, 1,09,636 வாகனங்கள் வந்துள்ளது. இ-பாஸ் நடைமுறை சென்னை உயர்நீதிமன்றத்தின் மறு உத்தரவு வரும் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

Related posts

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தேர்லுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் விலை ரூ.48 உயர்ந்து ரூ.1,903-க்கு விற்பனை

அக்.01: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை!