கொடைக்கானல் அஞ்சு வீடு அருவி பகுதியில் குளித்த 2 இளைஞர்கள் சடலமாக மீட்பு..!!

திண்டுக்கல்: கொடைக்கானல் அஞ்சு வீடு அருவி பகுதியில் குளித்தபோது காணாமல்போன 2 இளைஞர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். கொடைக்கானல் பேத்துப்பாறை பகுதியில் உள்ள அஞ்சு வீடு அருவி மிக ஆபத்தான அருவிகளில் ஒன்று. இந்த அருவியில் நேற்றையதினம் 6 நபர்கள் அருவியில் குளித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக 2 நபர்கள் நேற்றையதினம் காணாமல் போயினர். அவர்களை நேற்று முதல் இன்று வரை தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல் துறையினர், சேத்துப்பாறையை சேர்ந்த கிராமமக்கள் தேடி வந்த நிலையில் நசீர், கோகுல் ஆகிய இருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வருகின்றனர். சொந்த ஊருக்கு பொங்கல் கொண்டாட வந்த போது இந்த நிகழ்வு ஏற்பட்டுள்ளது. தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசாரின் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு இருவரின் உடல்கள் மீட்கப்பட்டது.

 

Related posts

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது