சென்னை: குவைத்தில் தீ விபத்தில் உயிரிழந்த 7 தமிழர்களின் உடல்கள் கொச்சி கொண்டுவரப்பட உள்ளது என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என்று முதலமைச்சர் உறுதியளித்துள்ளார். உயிரிழந்தவர்களின் உடல்களை அவர்களின் சொந்த ஊருக்கு சென்று உறவினர்களிடம் ஒப்படைக்கும் வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் கூறினார்.