சென்னை: கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் பணிகளை உடனே தொடங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். கிளாம்பாக்கத்திற்கு சென்னையில் இருந்து செல்ல போதிய வசதியின்றி மக்கள் சிரமமடைகின்றனர். விமான நிலையம்- கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் பணிகளை தமிழக அரசு தொடங்காதது வருத்தம் தருகிறது என அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.