சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பொங்கலுக்குள் பயன்பாட்டுக்கு வரும் எனவும் பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார் எனவும் அமைச்சர் சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வரும் போது தினசரி 2,310 பேருந்துகள் இயக்கப்படும், 840 ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மருந்து கடைகள், ஓட்டுநர், நடத்துநர் ஓய்வு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் தீயணைப்புத் துறை வண்டிகள் நிறுத்தப்படும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் தனி காவல்நிலையம் செய எனவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.