ஆவின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கிலும் ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் பொதுமக்களுக்கு எளிய வகையில் சென்றடைய பல்வேறு அரசு அலுவகங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு பூங்காக்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலும் ஆவின் பாலகம் அமைத்து விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் ஆவின் பாலகங்கள் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தற்போது கே.கே நகர் இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் புதிதாக ஆவின் பாலகத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து இஎஸ்ஐசி நல்வாழ்வு நண்பர்கள் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட தன்னார்வ பயானாளிகளுக்கு சான்றிதழ்களை அவர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் எம்எல்ஏ பிரபாகர ராஜா, இஎஸ்ஐசி மருத்துமவனை முதல்வர் காளிதாஸ் டி.சவான் மற்றும் மருத்துவமனை மற்றும் ஆவின் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.