Saturday, June 29, 2024
Home » கிச்சன் டிப்ஸ்

கிச்சன் டிப்ஸ்

by Lavanya

* குழம்புக்கு மிளகாய்த்தூள் அரைக்கும்போது ஒரு கைப்பிடி கல் உப்பு சேர்த்து அரைத்து வைத்துக்கொண்டால் பல மாதங்களானாலும் பூச்சி, வண்டு பிடிக்காமல் இருக்கும்.
* எலுமிச்சம் பழச்சாறு கலந்து சர்பத் தயாரிக்கும்போது அதில் ஒரு சிட்டிகை உப்பு கலந்துவிட்டால் துவர்ப்புத் தன்மை நீங்கி சுவையாக இருக்கும்.
* எலுமிச்சம் பழங்களை உப்பு ஜாடியில் போட்டு வைத்துவிட்டால் புதிது போல் இருக்கும். சாறும் அதிக அளவில் கிடைக்கும்.
* வெங்காயம் வதக்கும்போது சிறிதளவு சர்க்கரை சேர்த்தால் எளிதில் வதங்கிவிடும்.
* கேக் சாஃப்ட்டாகவும் அதிக மணமுடனும் இருக்க அரைகப் ஆரஞ்சு பழச்சாறு சேர்க்கவும்.
* பிரெட் சான்ட்விச் செய்ய ஜாம் இல்லாவிட்டால் ஒரு ஸ்லைசில் தேனையும், மற்றொரு ஸ்லைசில் வெண்ணெயையும் தடவி சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து பிறகு சாப்பிடலாம். ஜாம் இல்லாத குறை தெரியாது.
* நாலைந்து கிராம்புகளை சர்க்கரை டப்பாவில் போட்டு வைத்தால் எறும்புத் தொல்லை இருக்காது.- எம்.ஏ.நிவேதா.
* தக்காளி சட்னிக்கு சிறிது புளி சேர்த்து சமைத்தால் சுவை கூடுதலாகும்.
* கோகோ பவுடரில் சாக்லெட் கேக் செய்யும்போது சிறிது இன்ஸ்டன்ட் காபி சேர்த்தால் சாக்லெட் கேக்கில் ஒரு வித்தியாசமான சுவை கிடைக்கும்.
* பிரெட் ஸ்லைஸ்களில் சால்ட் பட்டர் அல்லது நெய் தடவி அதன்மேல் இட்லிப் பொடி தூவி, துண்டுகளை எண்ணெயில் பொரித்து எடுத்தால் மொறுமொறுப்பாகவும் சுவையாகவும் இருக்கும்.
* பீட்ரூட்டை கழுவிவிட்டு அடி, நுனி சீவி எடுத்துவிட்டு அப்படியே முழுசாக குக்கரில் வேகவைத்து எடுத்து தோலுரித்து சமைத்தால் நிறமும் மாறாது. சத்தும் வீணாகாது.
* எலுமிச்சம் பழ ஜூஸில் சிறிது சோம்புத்தூள் கலந்து பருகினால் வாசனையாக இருக்கும். உடலுக்கும் குளிர்ச்சி தரும்.
* பஜ்ஜி மிளகாயை இரண்டாக பிளந்து, எண்ணெய்யில் லேசாக வதக்கி எடுத்து பின்னர் பஜ்ஜி மாவில் தோய்த்து பஜ்ஜி செய்தால் காரமே இருக்காது. விதைகளை நீக்க வேண்டிய அவசியமும் இருக்காது.
* தோசைமாவு சரியாக புளிக்காவிட்டால் தோசை சரியாக வார்க்க முடியாது. அதனால் மாவில் சிறிது சர்க்கரை போட்டு கலந்து வார்த்தால் நன்றாக தோசை வரும்.– அ.யாழினி பர்வதம்.
* முட்டையை வேகவைக்கும்போது வேக வைக்கும் தண்ணீரில் சிறிது வினிகர் ஊற்றி வேகவிட்டால் முட்டையில் விரிசல் விடாது. திரவமும் வெளிவராது.
* பச்சைப்பருப்பு சுண்டல் செய்யும்போது பருப்பை லேசாக வாசனை வரும்படி வறுத்துவிட்டு செய்தால் சுண்டல் உதிரியாக வரும்.
* கலந்த சாதம், வெஜிடபிள் பிரியாணி செய்யும்போது குக்கர் மூடியைத் திறந்ததுமே சிறிது எலுமிச்சைச் சாறைவிட்டு கிளறினால் சாதம் உதிரி உதிரியாக இருக்கும்.
* பக்கோடா செய்யும்போது சிறிதளவு வேர்க்கடலையை பொடிசெய்து கடலைமாவில் கலந்து செய்தால் பக்கோடா மொறு மொறுவென ருசியாக இருக்கும்.
* வெங்காயப் பக்கோடா செய்யும்போது, சிறிது இஞ்சியையும் அரைத்து சேர்த்து பக்கோடா மாவில் கலந்து செய்தால் வாசனையாக இருப்பதோடு வாயுத் தொல்லை நீங்கும். – எம்.வசந்தா.
* மிளகாய், தனியா, சீரகம் போன்ற மசாலா சாமான்களை கடையில் இருந்து வாங்கி வந்ததும் ஒருமுறை வாணலியில் லேசாக வறுத்துவிட்டு, பிறகு பாட்டிலில் கொட்டி வைத்தால் நீண்டநாட்கள் கெடாமல் இருக்கும்.
* மிளகாய் வற்றலை வறுக்கும் முன்பு அதனுடன் அரைத் தேக்கரண்டி உப்பு சேர்த்தால் மூக்கைத் துளைக்கும் நெடி கமறல் இருக்காது.
* கண்ணாடி பாட்டிலில் மிளகாயைப் போட்டு, இறுக மூடி வைத்தால் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.- அமுதா அசோக்ராஜா.
* கைகளில் டெட்டால் வாசனை, பினாயில் வாசனையைப் போக்க, கடுகு கலந்த நீரால் கழுவ, வாசனை போய்விடும்.
* அடிபிடித்த பாத்திரத்திற்குள் வெங்காயத்தை நறுக்கிப் போட்டு நீரை ஊற்றி கொதிக்கவிடவும். பிறகு எடுத்து சுரண்டி தேய்க்கப் பாத்திரம் பளிச்சென ஆகும்.
* செம்புப் பாத்திரங்களை புளி அல்லது எலுமிச்சையுடன் உப்பு சேர்த்து தேய்க்க பளிச்சிடும்.- பிரியா மது.
* தர்பூசணியின் வெள்ளைப் பகுதியை சீவி எடுத்து அரிசியுடன் சேர்த்து அரைத்து தோசை வார்க்கலாம். உளுந்து தேவை இல்லை. சுவை நன்றாக இருக்கும்.
* வாழைப்பழங்களை சீப்பாக வாங்கி வந்தால், அதை அப்படியே டேபிள் மீது வைக்காமல் ஒரு கயிறுகட்டி அதில் தொங்கவிட்டால் விரைவில் பழுத்துவிடாமல் இருக்கும்.
* பாயசத்தில் திராட்சைக்குப் பதில் பேரீச்சம்பழத்தை நறுக்கிச் சேர்த்தால் அருமையாக இருக்கும்.
* தயிர் புளிக்காமல் இருக்க அதில் ஒரு துண்டு தேங்காயைப் போட்டு வைத்தால் தயிர் விரைவில் புளிக்காது.
* ரவையை உப்புப் போட்டுப் பிசறி வைத்து அத்துடன் உளுந்தை அரைத்துச் சேர்த்து தோசை வார்த்தால் சுவையாக இருக்கும்.
* அதிரசம் செய்யும்போது சிறிது பேரீச்சம்பழம் கலந்து செய்தால் சுவையாகவும், மெத்தென்றும் இருக்கும்.
* இரண்டு வாழைப்பழத்துடன் சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்து அதில் ஒன்றரை டம்ளர் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க வைக்கவும். பிறகு ஏலக்காய்ப் பொடியுடன் ஏதாவது ஒரு எசன்ஸ் சேரத்துவிட்டால் சத்தான பாயசம் தயார்.
* நறுக்கிய ஆப்பிள் மீதமாகிவிட்டால் சிறிது உப்புக் கலந்த நீரில் போட்டு வைத்தால் நிறம் மாறாமலும், கெடாமலும் இருக்கும்.
* ஆரஞ்சுப் பழத்தில் 4 கிராம்புகளை குத்தி, அதை கிச்சனில் வைத்துவிட்டால் கிச்சன் மணமுடன் இருக்கும். பூச்சிகளும் வராது.- மல்லிகா சங்கரபாண்டியன்.

You may also like

Leave a Comment

4 × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi