லண்டன்: இங்கிலாந்து மன்னர் 3ம் சார்லஸ்க்கு சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது நடந்த பரிசோதனையில் அவருக்கு புராஸ்டேட் வீக்கம் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.அதை தொடர்ந்து நடந்த பரிசோதனையில் அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
புற்று நோய் பாதிப்பில் இருந்து சார்லஸ் விரைவில் குணமடைய வேண்டி இங்கிலாந்து மக்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில்,மன்னர் சார்லஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தனக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.