சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து குதித்து இளைஞர் தற்கொலை செய்ததால் பரபரப்பு..!!

சென்னை: கிண்டி அருகே உள்ள கத்திப்பாரா பாலத்தில் இருந்து குதித்து 24வயது மதிக்கத்தக்க இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இன்று காலை 10.15மணியளவில் கத்திப்பாரா பாலத்தில் இருந்து இருசக்கர வாகனத்தைவிட்டு இறங்கிய இளைஞர் கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் பயணம் செய்த மக்கள் உடனடியாக காவல்துறைக்கும்,108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்தனர். விரைந்து சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தபோது இளைஞர் உயிரிழந்தது தெரியவந்தது.

இதை அடுத்து மவுண்ட் போக்குவரத்து புலனாய்வு குழு போலீசார் சம்பவ இடம் விரைந்து உடலை மீட்டு உடற்கூராய்விற்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டனர். குறிப்பாக உயிரிழந்த மாணவர் விருகம்பாக்கம் கிருஷ்ணா நகர் 6வது பிரதான சாலை பகுதியை சேர்ந்த சாமுவேல் ராஜ்(24) என்பது தெரியவந்தது. இதை அடுத்து அவர் தற்கொலை செய்து கொண்டது எந்த காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து மவுண்ட் போக்குவரத்து புலனாய்வு போலீசார் தற்போது தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related posts

அரசு பள்ளியில் மாற்றுத்திறனாளிகளை பற்றி அவதூறாக பேசிய மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணு கைது

சென்னையில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்: கோயில்களில் திரளான பக்தர்கள் சிறப்பு வழிபாடு

பிஎன்ஒய் மெலன் வங்கி அலுவலர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு: வங்கி சேவைகள் மேம்படுத்துவது குறித்து ஆலோசனை