ஈரோடு: கீழ்பவானி கால்வாயில் ஆகஸ்ட் 15-ம் தேதி நீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். ஈரோடு வெண்டிபாளையம் கீழ்பவானி வடிநில கோட்ட செயற்பொறியாளரை சந்தித்து விவசாயிகள் மனு அளித்தனர். சீரமைப்பு பணிகளை விரைந்து முடித்து வழக்கம்போல ஆகஸ்ட் 15ம் தேதி நஞ்சை சாகுபடிக்காக நீர் திறக்க கோரிக்கை வைத்தனர்.