சென்னை: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இறந்து பிறந்த குழந்தையின் உடலை சரியாக மூடாமல், பெற்றோரிடம் வழங்கிய பிணவறை உதவியாளர் பன்னீர் செல்வம் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பாக விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் மறு உத்தரவு வரும் வரை பணி இடைநீக்கம் தொடரும் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.