அப்போது பைக்கில் சந்தேகப்படும்படி வந்த நபர்களை மடக்கி பிடித்தனர். பின்னர், அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் நடத்திய விசாரணையில், செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி (19), காஞ்சிபுரம் படப்பை பகுதியை சேர்ந்த யுவனேஷ் குமார் (20), ரிஷாத் குமார் (24) ஆகிய 3 பேரும், ஒரகடத்தில் சாலையில் செல்பவர்களிடம் கத்தி முனையில் மிரட்டி தொடர் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. மேலும், அவர்களிடமிருந்து செல்போன்கள், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து, கைது செய்யப்பட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.