சிறுமிகள் கடத்தல் வழக்கு: ஆயுள் தண்டனை குறைப்பு

சென்னை: சிறுமிகளை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் 3 பேரின் ஆயுள் தண்டனை 10 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. தண்டனையை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மகளிர் சிறப்பு நீதிமன்றம் 2019-ல் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, தண்டிக்கப்பட்ட 15 பேர் மேல்முறையீடு செய்தனர். காவல்துறை விசாரணையில் குறைபாடுகள் உள்ளதாக கூறி சென்னை உயர்நீதிமன்றம் தண்டனையை குறைத்து உத்தரவிட்டது. மேலும், பாதிக்கப்பட்ட 2 சிறுமிகளுக்கும் தலா ரூ.3 லட்சம்
இழப்பீட்டு வழங்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

 

Related posts

மகாவிஷ்ணுவை விமான நிலையத்திலேயே கைது செய்ய திட்டம்!

திருச்சியில் இருந்து காரைக்கால் சென்ற பயணிகள் ரயில் எஞ்சினில் இருந்து திடீரென புகை வெளியேறியதால் பரபரப்பு!

தமிழ்நாடு இணைய பாதுகாப்பு கொள்கை 2.0-வை வெளியிட்டது தமிழ்நாடு அரசு