மஹிந்திரா குழுமத்தின் முன்னாள் தலைவர் கேஷுப் மஹிந்திரா மறைவு

புதுடெல்லி: மஹிந்திரா குழுமத்தின் முன்னாள் தலைவர் கேஷுப் மஹிந்திரா வயது மூப்பினால் மும்பையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 99. இவர் அமெரிக்காவின் வார்ட்டனில் உள்ள பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தவர். தனது தந்தை ஜெகதீஷ் சந்திர மஹிந்திரா தொடங்கிய மஹிந்திரா குழுமத்தில் 1947ம் ஆண்டில் கேஷுப் மஹிந்திரா இணைந்தார். பின்னர் 1963ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை மஹிந்திரா குழுமத்தின் தலைவராக பதவி வகித்தார். பணி ஓய்வு பெற்ற போது, அவரின் சகோதரரின் மகன் ஆனந்த் மஹிந்திராவை குழுமத்தின் தலைவராக அறிவித்தார்.

Related posts

பெற்றோரை திருமணமான அரசு ஊழியரின் காப்பீட்டு திட்டத்தில் குடும்ப உறுப்பினராக சேர்ப்பது குறித்து முடிவெடுக்க வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

கள்ளச்சாராயத்தை ஒழிக்க கொண்டு வரப்பட்ட சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்: ஆயுள்தண்டனை மற்றும் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.320 உயர்ந்தது