மண்ணெண்ணெய் அளவை குறைத்த ஒன்றிய அரசு: அமைச்சர் சக்கரபாணி விளக்கம்

சென்னை: தமிழ்நாட்டிற்கான மண்ணெண்ணெய் அளவை ஒன்றிய அரசு 2,300 கிலோ லிட்டராக குறைத்துள்ளது என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். குடியாத்தத்தில் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் விளக்கம் அளித்துள்ளார். 2021ல் 8,500 கிலோ லிட்டர் வழங்கப்பட்ட நிலையில் 2022ல் 4,500 கிலோ லிட்டராக குறைக்கப்பட்டுள்ளது. தற்போது 2,300 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் மட்டுமே வழங்குவதால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

Related posts

கூகுள் மேப்பை நம்பி ஆற்றுக்குள் காரை விட்ட இளைஞர்கள்.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

தீபாவளியையொட்டி அக்டோபர் 29ம் தேதிக்கு; முக்கிய ரயில்கள் அனைத்திலும் 5 நிமிடத்தில் புக்கிங் முடிந்தது: தென் மாவட்ட ரயில்கள் ஹவுஸ்புல்