கேரள அரசு நடத்திய பம்பர் லாட்டரி குலுக்களில் கோவை அன்னூரைச் சேர்ந்த நடராஜன் என்பவருக்கு ரூ.25 கோடி பரிசு

பாலக்காடு: பாலக்காடு மாவட்டம் வாளையாரில் நடராஜன் வாங்கிய TE230662 என்ற எண் கொண்ட லாட்டரி சீட்டுக்கு ரூ.25 கோடி முதல் பரிசு விழுந்தது. ரூ.5,000 கொடுத்து நடராஜன் வாங்கிய 10 லாட்டரி சீட்டுகளில் ஒன்றில் ரூ.25 கோடி பரிசு கிடைத்துள்ளது. முதல் பரிசை வென்ற நடராஜனுக்கு 30 சதவீதம் வருமானவரி போக ரூ.17.5 கோடி கிடைக்கும் என்று தெரிவித்துள்ளனர். ஓணம் பண்டிகையை ஒட்டி கேரள அரசு நடத்திய பம்பர் லாட்டரி குலுக்களில் கோவை அன்னூரைச் சேர்ந்த நடராஜன் என்பவருக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது.

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு