திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் எடவண்ணா பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு துபாயில் இருந்து ஊருக்கு வந்திருந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் அவருக்கு காய்ச்சல், இருமல் மற்றும் உடலில் அம்மை போன்ற லேசான தடிப்புகளும் காணப்பட்டன. தொடர்ந்து சிகிச்சைக்காக மஞ்சேரியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.