தற்போது பக்கத்து மாநிலமான கேரளாவில் 200 பேருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறையினர் கேரளாவிலும் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் இந்த நோய் பரவாமல் இருக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு செய்து வருகிறது. குறிப்பாக கடந்த 2 ஆண்டுகளில் தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று இல்லாமல் இருந்து வந்தது. ஆங்காங்கே ஒன்று அல்லது இரண்டு பேருக்கு நோய் தொற்று இருந்தது. பின்னர் சிகிச்சை மூலம் குணமடைந்துவிட்டனர்.தற்போது உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் தொற்றினால் தமிழகத்தில் இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
தமிழகத்தில் தற்போது 29 பேருக்கு கொரோனா தொற்று பரவி அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் அனைவரும் நல்ல முறையில் வீடு திரும்பி உள்ளனர். எனவே, கொரோனா நோய் தொற்றை கண்டுபிடிக்க தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் காய்ச்சல், சளி, உள்ளிட்ட உபாதைகளால் வருபவர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே இந்த வைரஸ் தொற்றுக்காக யாரும் அச்சப்படத்தேவையில்லை. இதனால் உயிரிழப்பும் ஏற்படுவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.