சென்னை: கேரளா மாநிலம் வயநாடு நிலச்சரிவு நிவாரணப் பணிகளுக்கு அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு நிதி அறிவிக்கப்பட்டுள்ளது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களும் அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.