கேரளாவில் பருவ மழை தீவிரம்

திருவனந்தபுரம்: கேரளா முழுவதும் பருவமழை தீவிரமடைந்து உள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம் உள்பட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கேரளாவில் வழக்கமாக ஜூன் முதல் செப்டம்பர் வரை 4 மாதங்கள் தென்மேற்கு பருவமழை பெய்யும். ஆனால் இந்த வருடம் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை 3 மாதங்கள் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. இந்த மாதங்களில் வழக்கமாக பெய்வதை விட 55 சதவீதத்திற்கும் மேல் மழை குறைந்தது. குறிப்பாக ஆகஸ்ட் மாதத்தில் வரலாறு காணாத அளவுக்கு மழை குறைந்தது.

கடந்த 100 வருடங்களில் இந்த ஆகஸ்ட் மாதத்தில் தான் மழை மிகவும் குறைவாக பெய்தது. இந்த நிலையில் இந்த மாதம் (செப்டம்பர்) தொடக்கத்தில் இருந்து கேரளா முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வறண்டு கொண்டிருந்த கேரள அணைகளில் மீண்டும் தண்ணீர் வரத்து அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. கடந்த சில தினங்களாக தென் மாவட்டங்களை விட எர்ணாகுளம், இடுக்கி திருச்சூர் உள்பட மத்திய மாவட்டங்களில் அதிக மழை பெய்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா உள்பட தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

Related posts

திருப்பதி அன்ன பிரசாதத்தில் பூரான் இருந்ததாக கூறப்படும் செய்தி முற்றிலும் தவறானது: திருமலை தேவஸ்தானம் விளக்கம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும்.! இயல்பைவிட கூடுதல் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

ரத்த அழுத்தத்தை சீராக்கும் ‘பேஷன்’ பழம்: ஊட்டியில் கிலோ ரூ.400க்கு விற்பனை