கடந்த 100 வருடங்களில் இந்த ஆகஸ்ட் மாதத்தில் தான் மழை மிகவும் குறைவாக பெய்தது. இந்த நிலையில் இந்த மாதம் (செப்டம்பர்) தொடக்கத்தில் இருந்து கேரளா முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வறண்டு கொண்டிருந்த கேரள அணைகளில் மீண்டும் தண்ணீர் வரத்து அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. கடந்த சில தினங்களாக தென் மாவட்டங்களை விட எர்ணாகுளம், இடுக்கி திருச்சூர் உள்பட மத்திய மாவட்டங்களில் அதிக மழை பெய்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா உள்பட தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.