கேரளாவில் லேசான நில அதிர்வு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள ஆம்பலூர், கல்லூர் ஆகிய இடங்களில் நேற்று அதிகாலை லேசான நில அதிர்வு உணரப்பட்டது. மேலும் சில பகுதிகளில் பூமிக்கு அடியில் இருந்து முழக்கம் கேட்டதாகவும் அந்த பகுதியினர் கூறினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது. இது குறித்து அறிந்ததும் திருச்சூர் மாவட்ட கலெக்டர் கிருஷ்ண தேஜா சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். ரிக்டர் அளவுகோலில் எதுவும் பதிவு ஆகவில்லை என்றும், இது குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் கலெக்டர் கிருஷ்ண தேஜா கூறினார்.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி