அப்போது காரை நிறுத்துவது போல் நடித்து, பின்னர் அதிவேகமாக ஓட்டிசென்றனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் காரை விரட்டி சென்று மடக்கிப்பிடித்தனர். பின்னர் காரில் இருந்த 1 கோடியே 90 லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் காரில் இருந்த 2 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் அங்காடிபுரத்தைச் சேர்ந்த முகமதுகுட்டி (41), மலப்புரம் மாவட்டம் புத்தனங்காடியைச் சேர்ந்த முகமது நிஷார் (36) என தெரியவந்தது. இவர்கள் கோவையில் இருந்து மலப்புழா மாவட்டத்திற்கு பணத்தை கடத்தி சென்றது உறுதியானது. மேலும் 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.