மேலும் மோன்சனுக்கு அரசியல்வாதிகள், போலீஸ் உயரதிகாரிகள், நடிகர்கள் உள்பட பலருடன் நெருங்கிய தொடர்பு இருந்ததும் தெரியவந்தது. இது தொடர்பாக ஐஜி லக்ஷ்மணா, முன்னாள் டிஐஜி சுரேந்திரன், காங்கிரஸ் மாநிலத் தலைவர் சுதாகரன் உள்பட முக்கிய பிரமுகர்கள் மீது குற்றப்பிரிவு போலீஸ் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் ஐஜி லக்ஷ்மணாவை கடந்த சில தினங்களுக்கு முன் குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்தனர். பின்னர் இவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் ஐஜி லக்ஷ்மணாவை சஸ்பெண்ட் செய்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.