கேரளாவில் கனமழைக்கு 3 நாளில் 15 பேர் பலி

திருவனந்தபுரம்: கேரளா முழுவதும் பலத்த மழை பெய்து வரும் நிலையில் 3 நாட்களில் 15 பேர் மழைக்கு பலியாகியுள்ளனர். கேரளாவில் தொடர் மழை காரணமாக கடந்த 3 நாட்களில் 15 பேர் பலியாகி உள்ளனர். பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. அடுத்த 3 நாட்களுக்கு கேரளா முழுவதும் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நேற்று கண்ணூர், வயநாடு, காசர்கோடு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர் உள்பட 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா மற்றும் பத்தனம்திட்டா மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு