திருவனந்தபுரம்: வயநாட்டில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி சுமார் 160 பேர் உயிரிழந்துள்ள நிலையில் முதலமைச்சர் பினராயி விஜயன் மூத்த அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். திருவனந்தபுரத்தில் இன்று நடந்த உயர்மட்ட குழு கூட்டத்தில் மூத்த அமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர். பலி எண்ணிக்கை உயரலாம் என்ற அச்சத்தை அடுத்து எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை என தகவல் வெளியாகியுள்ளது.