1970 முதல் 2021 வரை காங்கிரஸ் கட்சி சார்பாக கேரள மாநிலம் புதுப்பள்ளி தொகுதியில், போட்டியிட்ட அனைத்து முறையும் வெற்றி வாகைசூடி வீழ்த்த முடியாதவராக தனது வாழ்க்கை, அரசியல் பயணத்தை நிறைவு செய்திருக்கிறார்; கடந்த 2004-06 மற்றும் 2011-16 ஆகிய இருமுறை அம்மாநில முதலமைச்சராக பதவி விகித்தவர் மறைந்த உம்மன் சாண்டி. இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள செய்தியில்,”உம்மன் சாண்டி மிக சிறந்த நிர்வாகி, மக்களுடன் நெருங்கி வாழ்ந்தவர்.
நாங்கள் இருவரும் ஒரே ஆண்டில் தான் சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டோம். மாணவர் பருவத்தில் இருந்து அரசியலுக்கும் இருவரும் ஒன்றாக தான் அடியெடுத்து வைத்தோம்,’என்றார். முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி மறைவை தொடர்ந்து, அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கேரள மாநில அரசு இன்று ஒருநாள் பொது விடுமுறை அறிவித்தது.