கண்ணிமைக்கும் நேரத்திற்குள் கார் முழுவதுமாக எரிந்து எலும்புக்கூடானது. காருக்குள் இருந்த கிருஷ்ண பிரகாஷ் உடல் கருகி பரிதாபமாக இறந்தார். சத்தத்தைக் கேட்டு அந்த பகுதியினர் உடனடியாக தீயணைப்புப் படைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இது குறித்து அறிந்த மாவேலிக்கரை போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர்.
அதைத்தொடர்ந்து கிருஷ்ண பிரகாஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், கார் தீ பிடித்ததற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.