அச்சமயத்தில் அருகில் இருந்த மண் சரிந்து இருவர் மீதும் விழுந்தது. இதில் காளிசாமி முற்றிலும் மண்ணில் புதைந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த அடிமாலி தீயணைப்பு துறையினர் இரு தொழிலாளர்களையும் சிறு காயங்களுடன் மீட்டு அவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். இத்தகைய தொழிலாளர்கள் மண்ணில் புதைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.