சென்னை: கேரள அரசின் ஒத்துழைப்புடன் ஆனைமலை ஆற்றின் குறுக்கே அணை கட்டப்படும் என ஐகோர்ட் நம்பிக்கை தெரிவித்துள்ளது. பரம்பிக்குளம்-ஆழியாறு கால்வாய் திட்ட ஆயக்கட்டுதாரர்கள் தொடுத்த வழக்கில் நீதிபதி தண்டபாணி கருத்து தெரிவித்துள்ளார். மின் மோட்டார் மூலம் தண்ணீர் எடுக்க அனுமதிக்கக் கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்துவைத்தது.