இது தொடர்பாக அப்பகுதியை சார்ந்த கிராமமக்கள் உடனடியாக லாரியை சிறைபிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.இது போன்று 3 முறை மீன் கழிவுகள் கொட்டப்பட்டதாக கிராமமக்கள் புகார் தெரிவித்தனர். இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட லாரி மற்றும் ஓட்டுநர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாரிடம் அப்பகுதிமக்கள் தெரிவித்தனர். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக்கூடிய பணியை போலீசார் மேற்கொண்டுள்ளனர். வாகனத்தின் மீது 50ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.