திருவனந்தபுரம்: கேரளாவில் இதுவரை இல்லாத வகையில் பேரழிவு ஏற்பட்டுள்ளதாக முதலமைச்சர் பினராயி விஜயன் வேதனை தெரிவித்துள்ளார். வயநாடு நிலச்சரிவு தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் விளக்கம் அளித்துள்ளார். நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் 34 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்..அரசால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது..நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களில் முழு வீச்சில் பணி நடைபெற்று வருகிறது என பினராயி விஜயன் கூறியுள்ளார்.