கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் அமைச்சர் செஞ்சி மஸ்தான் சந்திப்பு..!!

கேரளா: கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் அமைச்சர் செஞ்சி மஸ்தான் சந்தித்துள்ளார். குவைத் தீ விபத்தில் உயிரிழந்த 7 தமிழர்களின் உடல்களை பெற்றுக்கொள்ள அமைச்சர் செஞ்சி மஸ்தான் கொச்சி சென்றடைந்தார். குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் சற்றுநேரத்தில் கொச்சி கொண்டு வரப்பட உள்ளன. குவைத்தில் இருந்து 45 இந்தியர்களின் உடல்களுடன் கொச்சிக்கு விமானம் மூலம் வந்து கொண்டிருக்கிறது. தமிழர்களின் உடல்களை பெறுவதற்காக சென்ற அமைச்சர் மஸ்தான், கொச்சி விமான நிலையத்தில் கேரள முதல்வரை சந்தித்தார்.

Related posts

கந்துவட்டி பிரச்சனை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு

ஆலத்தூர் ஒன்றியத்தில் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 13 ஏக்கர் நிலம்: மரக்கன்றுகளை நட்டுவைத்து கலெக்டர் அசத்தல்

சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை