போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி கென்யா நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன் கண்ணீர் புகைக்குண்டுகளையும் வீசினர். அப்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் ஓடியதால் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியது. இதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தின் ஒரு பகுதிக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். தீ வைக்கப்பட்டதை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
இதனையடுத்து கலவரத்தை கட்டுப்படுத்த கண்ணீர் புகைக்குண்டுகளை போலீசார் வீசினர் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த வன்முறையில் இதுவரை 13 பேர் பலியாகி உள்ளனர். இதனிடையே கென்யாவில் பதற்றம் நிலவி வருவதால் அங்கு வாழும் இந்தியர்கள் அத்தியாவசியமின்றி வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.