ஆம்ஆத்மி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லியில் கெஜ்ரிவால் மனைவி பிரசாரம்


புதுடெல்லி: டெல்லியில் ஆம் ஆத்மி வேட்பாளருக்காக முதல்வர் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் முதல் முறையாக நேற்று பிரசாரம் மேற்கொண்டார். மதுபான கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கட்சியின் நட்சத்திர பேச்சாளரான கெஜ்ரிவால் சிறையில் உள்ளதால் கட்சியின் பிரசாரத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் முதல் முறையாக நேற்று டெல்லியில் பிரசாரம் செய்தார். கிழக்கு டெல்லி ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமாரை ஆதரித்து சாலை வழி வாகன பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏராளமான மக்கள் திரண்டனர்.

Related posts

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்

74000 பேர் பனிலிங்க தரிசனம்